ஸ்லோவேனியாவில் விபத்துக்குள்ளான விமானம் : மூவர் பலி!
வடகிழக்கு ஸ்லோவேனியாவில் பனிமூட்டமான வானிலையால் சிறியரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
அதில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Cessna Skyhawk விமானம் Prekmurje பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் தெரிவித்தனர்.
முதலில் நான்கு பேரை ஏற்றிச் செல்லும் வகையில் விமானம் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஒருவர் பின் தங்கியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.





