இலங்கையின் வடமாகாணத்தின் உள்ள காவல் நிலையங்கள் தாக்கப்படவுள்ளதாக தொலைபேசி அழைப்பு!

இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள 10 காவல் நிலையங்கள் தாக்கப்படவுள்ளதாக காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பேற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை இந்த அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், வடக்கில் உள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)