இலங்கை

இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க அனுமதி!

இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்று (26.06) ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கேமிங் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவைத் தயாரிக்க சட்ட வரைவாளர் அறிவுறுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேசினோ ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதன் மூலம் கேமிங் நிறுவனங்களிடமிருந்து வரிகளை முறையாக வசூலிப்பது,  கேமிங் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது,  சமூகம் மற்றும் தனிநபர்கள் மீது கேமிங்கின் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content