ஆசியா செய்தி

ஜப்பானில் செல்லுபடியான கடவுச்சீட்டு இல்லாத மக்கள் – வெளிவந்த தகவல்

ஜப்பானிய குடிமக்களில் சுமார் 6 இல் ஒருவருக்கு மட்டுமே செல்லுபடியான கடவுச்சீட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் செல்லுபடியான கடவுச்சீட்டு வைத்திருக்கும் குடிமக்களைவிட அந்த எண்னிக்கை மிகவும் குறைவாகும்.

ஜப்பானிய குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவந்தாலும், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்திய எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ஜப்பானில் 21.6 மில்லியன் செல்லுபடியான கடவுச்சீட்டு இருந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் அது சுமார் 17.5 சதவீதமாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு ஜப்பானிய மக்கள்தொகையில் சுமார் கால்வாசி மக்கள் செல்லுபடியான கடவுச்சீட்டினை வைத்திருந்தனர்.

(Visited 50 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!