இலங்கை

போலி ஆவணங்கள் மூலம் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் வெளிநாடு செல்ல தடை!

போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான நிறுவன உரிமையாளரும், அதற்கு ஒப்புதல் அளித்த இரண்டு மூத்த அரச அதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பிரேரணையை சமர்ப்பித்ததை அடுத்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் சுகாதார அமைச்சின் விநியோக பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க ஆகியோர் சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

போலியான ஆவணங்களை தயாரித்து 22,500 இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்கீழ் 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content