தரைவழி தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்குவாரா ட்ரம்ப்?
ஈரானில் பல வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட தரைவழி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் ஆயத்தமாகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முறையான ஒப்புதல் அளித்துள்ளாரா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது ஒரு முழுமையான போர் நடவடிக்கையாக இருக்காது என்றும், மாறாக சிறப்புப் படைகள் மற்றும் தரைப்படை வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் திடீர் தாக்குதல்களாக மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான அமெரிக்கக் கடற்படையினர் மற்றும் வான்வழித் தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.





