உலகம்

தென்னாப்பிரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணமாகிய பெங்குவின்

தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்துக்கு பெங்குவின் காரணம் என்று தெரியவந்துள்ளது.

ஈஸ்ட்டன் கேப் வட்டாரத்தில் Gqeberha எனும் தீவைப் பற்றிய தரவு வான்வழி சேகரிக்கப்பட்டது. அப்போது ஒரு பெங்குவினை இன்னொரு இடத்துக்கு மாற்ற ஹெலிகொப்டர் விமானிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதை ஏற்றுக்கொண்ட விமானி பெங்குவினை ஒரு பெட்டியில் வைத்து தமக்கு அருகே உள்ள இருக்கையில் வைத்தார். பெட்டி இருக்கையிலிருந்து விழாமல் இருக்க விமானி வேறு எதையும் பயன்படுத்தவில்லை.

ஹெலிகொப்டர் புறப்பட்டபோது இருக்கையிலிருந்து நகர்ந்த பெட்டி ஹெலிகொப்டரின் இயக்கக் கருவிகள் மீது விழுந்தது.

விமானி கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. விமானியோ, பயணிகளோ காயமடையவில்லை. பெங்குவினும் நலமாக இருந்தது.

ஹெலிகாப்டருக்கு மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெங்குவினை முறையாக வைக்காததால் ஆபத்து ஏற்பட்டது என்று தென்னாப்பிரிக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!