இலங்கை செய்தி

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – டில்வின் சில்வா

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கூடிய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,  அனுரகுமார திஸாநாயக்க நாளை (23) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டில்வின் சில்வா, அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

(Visited 104 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!