ஐரோப்பா

ஜெனீவாவில் பழிக்கு பழிவாங்க காத்திருக்கும் பெற்றோர் – வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்

ஜெனீவாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்க, அவரது குடும்பத்தினர் காத்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அச்சம் உருவாகியுள்ளது.

கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள Thônex என்னுமிடத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே, அந்தப் பகுதி இளைஞர்கள் வீடுகளுக்குள் அடைந்துகிடக்கிறார்களாம்.இதற்கிடையில், கடந்த சில நாட்களில் அந்த பகுதிக்கு பல முறை பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் எந்த அளவுக்கு பதற்றம் நிலவுகிறது என்பதைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன், கொலை செய்ததாகக் கூறப்படும் நபருடைய குடும்பத்தினருக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!