செய்தி மத்திய கிழக்கு

சவுதி அரேபியா வந்தார் பாலஸ்தீன அதிபர்

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளின் பின்னணியில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்ய ரியாத் வந்தடைந்தார்.

திங்கட்கிழமை மாலை பாலஸ்தீனிய அதிகார சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுடன் ரியாத்துக்கு வந்த அவரை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தின் துணை ஆளுநர் அமீர் முகமது பின் அப்துல்ரஹ்மானா பின் அப்துல் அஜீஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் பைசல் பின் ஃபர்ஹான் ஆகியோர் வரவேற்றனர்.

ஜெருசலேமில் உள்ள சவுதி தூதர் நயிஃப் பின் பந்தர் அல் சுதைரி, சவூதிக்கான பாலஸ்தீன தூதர் பாசிம் அல் அகா மற்றும் சவுதி ராயல் புரோட்டோகால் துணை செயலாளர் ஃபஹத் அல் சாஹில் ஆகியோரும் பாலஸ்தீன அதிபரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை பல்வேறு மட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

(Visited 83 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!