செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி விலகல்

பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த கேரி கிரிஸ்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம்தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக நீடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஒவ்வொரு ஸ்டாஃப் ஆக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி வருகிறது. கேரி கிரிஸ்டன் மட்டும்தான் நீடித்து வந்தார்.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே செல்லும் நிலையில் கேரி கிர்ஸ்டன் அணியுடன் செல்லமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கிர்ஸ்டன் டேவிட் ரெய்ட்-ஐ ஹை பெர்மார்மன்ஸ் கோச்சாக நியமிக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.

டேவிட் ரெய்ட்-க்குப் பதிலாக மற்றொரு ஆலோசனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளது. அதை கேரி கிர்ஸ்டன் ஏற்க மறுத்துவிட்டார். இதனால்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லெஸ்பி அல்லது தேசிய அணியின் தேர்வாளராக உள்ள அக்யூப் ஜாவித் ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முகமது ரிஸ்வானை கேப்டனாக பாகிஸ்தான் அணி நியமித்துள்ளது.

(Visited 59 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி