ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய சிறைச்சாலையில் நிரம்பி வழியும் கைதிகள்

ஆஸ்திரேலிய கைதிகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியில் கைதிகளின் எண்ணிக்கை 41929 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, மக்கள் தொகையில் 100,000 பேருக்கு 201 முதல் 202 கைதிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பெண் கைதிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ரிமாண்ட் செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது இந்த எண்ணிக்கை 15937 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 25888 ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 சதவீதமும், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

எனினும், சட்டவிரோத போதைப்பொருள் குற்றச் செயல்கள் போன்ற குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!