600 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல்
Over 600 kg of narcotics found in seized fishing vessel
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் 600 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் கப்பலைகரைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
படகிலிருந்து பாதுகாப்புப் படையினரும் கணிசமான எண்ணிக்கையிலான ஆயுதங்களை மீட்டதாக அமைச்சர் விஜேபால மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, மார்ச் மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் மற்றொரு மீன்பிடி இழுவைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
அதில் 102 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 900 கிராம் கொகைன் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டன.
கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.




