உஸ்பெகிஸ்தான் தலைநகர் விமான நிலையம் அருகே பாரிய வெடிப்பு சம்பவம்
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்துக்கு அருகில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 16 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மேலும் குறைந்தது 160 பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் குறைந்தது 24 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
குறித்த விமான நிலையத்துக்கு அருகே உள்ள சுங்க சுரங்கத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டு வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





