உலகம் செய்தி

தமிழ்நாட்டில் காளை பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

தமிழ்நாட்டின்(Tamil Nadu) வேலூர்(Vellore) மாவட்டம் கோவிந்த ரெட்டிப்பாளையம்(Govinda Reddypalayam) கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காளைப் பந்தயத்தின் போது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை தொடர்பாக நடத்தப்பட்ட பாரம்பரிய காளைப் பந்தயமான எருதுவிடும் விழாவின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

65 வயது திலகர் என அடையாளம் காணப்பட்ட முதியவர் திருவண்ணாமலை(Tiruvannamalai) மாவட்டம் கண்ணமங்கலம்(Kannamangalam) அருகே உள்ள காட்டுகனூர் கிராமத்தில் வசிக்கிறார்.

அவர் தனது மகள் புவனேஸ்வரியைப் பொங்கல் விழாவிற்காக கோவிந்த ரெட்டிப்பாளையம் வந்திருந்தார்.

இந்நிலையில், அவர் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது ஒரு காளை அவரை முட்டி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அரியூர்(Ariyur) அருகே உள்ள கோவிந்த ரெட்டிப்பாளையம் என்ற இடத்தில் காளைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பாரம்பரிய விழாவைக் காண வேலூர் மாவட்டம் மற்றும் அண்டை பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!