தமிழ்நாட்டில் காளை பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் – 27 பேர் காயம்
தமிழ்நாட்டின்(Tamil Nadu) வேலூர்(Vellore) மாவட்டம் கோவிந்த ரெட்டிப்பாளையம்(Govinda Reddypalayam) கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காளைப் பந்தயத்தின் போது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை தொடர்பாக நடத்தப்பட்ட பாரம்பரிய காளைப் பந்தயமான எருதுவிடும் விழாவின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
65 வயது திலகர் என அடையாளம் காணப்பட்ட முதியவர் திருவண்ணாமலை(Tiruvannamalai) மாவட்டம் கண்ணமங்கலம்(Kannamangalam) அருகே உள்ள காட்டுகனூர் கிராமத்தில் வசிக்கிறார்.
அவர் தனது மகள் புவனேஸ்வரியைப் பொங்கல் விழாவிற்காக கோவிந்த ரெட்டிப்பாளையம் வந்திருந்தார்.
இந்நிலையில், அவர் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது ஒரு காளை அவரை முட்டி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அரியூர்(Ariyur) அருகே உள்ள கோவிந்த ரெட்டிப்பாளையம் என்ற இடத்தில் காளைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பாரம்பரிய விழாவைக் காண வேலூர் மாவட்டம் மற்றும் அண்டை பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.





