ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது ஊழல் நிதிப் புகார்

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ (Andrew) தனது சொகுசு பங்களாவை விற்றதில், பாரிய ஊழல் மற்றும் பண மோசடி நடந்திருக்கலாம் என பிபிசி புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கசாக்ஸ்தான் கோடீஸ்வரர் திமூர் குலிபாயேவ் (Timur Kulibayev) , இந்த சொத்தை வாங்குவதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2007-ஆம் ஆண்டு, சந்தை விலையை விட 7 மில்லியன் பவுண்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு, 15 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த இல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இத்தாலிய எண்ணெய் நிறுவன முறைகேடுகளில் கைமாறிய லஞ்சப் பணமே, இளவரசரின் சொத்தை வாங்கப் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது ஒரு “வெளிப்படையான பண மோசடி” நடவடிக்கை என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை இதுவரை முன்வரவில்லை.

சட்டவிரோதப் பணத்தைக் கையாண்டது தொடர்பாக இளவரசர் மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!