இலங்கை

இலங்கையில் சீருடையை புறக்கணிக்கும் தாதியர்கள்!

தமது தொழிற்சங்கத்தின் தாதியர்கள் சீருடைகள் இன்றி வசதியான வேறு ஆடைகளில் பணிக்கு வரவுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தங்களுக்கு விருப்பமான ஆடையை அணிந்து செருப்புகளை அணிந்து கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நோயாளர் பராமரிப்பு சேவையை சீர்குலைத்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தாம் தயாரில்லை என தெரிவித்த அவர், இந்த தொழில் நடவடிக்கையின் மூலம் சர்வதேச சமூகம் கூட இலங்கை சுகாதார அமைச்சு தொடர்பில் மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில் அளிக்காவிட்டால், தொழில் நடவடிக்கையை கடுமையாக்குவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் உறுதியளித்து சுற்றறிக்கைகள் கூட வழங்கிய பத்து மற்றும் பதினாறு ரூபா கொடுப்பனவை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!