இலங்கை

யாழில் ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இதன்படி வெளிமாவட்டங்களில் இருந்து நிகழ்வுகளுக்காக யானைகள் உள்ளிட்ட விலங்குகளை அழைத்து வரும்போது வனவள திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

உரிய அனுமதியின்றி யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதையும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!