இரண்டாம் கட்டமாக ரஷ்யாவிற்கு துருப்புக்களை அனுப்பிய வடகொரியா – வெளியான புலனாய்வு தகவல்!

ரஷ்யாவின் போருக்கு உதவ வட கொரியா கூடுதல் துருப்புக்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பான தேசிய புலனாய்வு சேவை (NIS), தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எத்தனை துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
வடகொரியா கடந்த ஆண்டு ரஷ்ய பிராந்தியமான குர்ஸ்க் மீது உக்ரேனிய படையெடுப்பை எதிர்த்துப் போராட 10,000 முதல் 12,000 துருப்புக்களை ரஷ்யாவிற்கு அனுப்பியது.
குர்ஸ்கில் வட கொரிய துருப்புக்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து விலகியதாகவும் புலனாய்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வட கொரிய வீரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்றவர்கள், ஆனால் போர் அனுபவம் இல்லாததாலும், நிலப்பரப்பில் பரிச்சயம் இல்லாததாலும், ரஷ்ய-உக்ரைன் போர்க்களங்களில் ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்கு அவர்கள் எளிதான இலக்குகளாக மாறிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.