இலங்கை

மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை -வாசுதேவ நாணயகார!

சர்வதேச நாணய நிதியம் நாட்டை ஆட்சி செய்கிறது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரை் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

மருதானையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை. ஆகவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியமே நாட்டை தற்போது ஆட்சி செய்கிறது.தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த எந்த திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்தை கொண்டு எவரிடமிருந்து கடன் பெறலாம் என்பது குறித்து மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!