சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு கட்டாய விடுமுறை

முன்னாள் அரச புலனாய்வுப் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவை கட்டாய விடுமுறையில் அனுப்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)