இலங்கை செய்தி

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு கட்டாய விடுமுறை

முன்னாள் அரச புலனாய்வுப் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவை கட்டாய விடுமுறையில் அனுப்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!