ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் பெரும் சோகம் – பலரின் உயிரை பறித்த தீ விபத்து

நியூசிலாந்து ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.

இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

தீ விபத்தில் பலியானோருக்கு பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து வந்த பொலிஸார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தீவிபத்தில் 10 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 52 தீயணைப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித