அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்பு – பங்குச் சந்தையில் அதிர்வலை

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரி அறிவிப்பால், அங்குள்ள பங்குச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக முக்கிய குறியீடுகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
Nasdaq குறியீடு 3.5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது சமீபத்திய காலக்கட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகக் கருதப்படுகிறது.
இதேபோல், S&P 500 குறியீடும் சுமார் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி, புதிய வரி நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தை எப்படி பாதிக்கும் என்ற அதிர்ச்சியை பிரதிபலிக்கின்றது.
முதலீட்டாளர்கள், வர்த்தகப் போட்டா போட்டி மீண்டும் தீவிரமாகும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
சீனாவும், அமெரிக்காவும் ஏற்கனவே வரி நடவடிக்கைகள் மூலம் பல தடங்களை உருவாக்கிய நிலையில், புதிய கட்டுப்பாடுகள் மேலும் சந்தையை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாகவே அமெரிக்கக் கப்பல்களுக்கு சீனா 10 சதவீதம் வரி விதித்து இருந்தது. இந்த இருதரப்பு வரி நடவடிக்கைகள், உலக வர்த்தகத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.