கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் வெட்டு – வீதிக்கு இறங்கிய மக்கள்

தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து, வீதிகளின் குறுக்கே குப்பைகளை கொட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் மின் வெட்டு ஏற்பட்டது.
மின் விநியோகம் சீரான அடுத்த 24 மணி நேரத்தில், மீண்டும் மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டு, முழு தீவும் இருளில் மூழ்கியதால் மக்கள் ஆங்காங்கே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(Visited 47 times, 1 visits today)