ஐரோப்பா செய்தி

பிரைட்டன் அரண்மனை விற்பனைக்கு

பிரைட்டன் பியர் குழுமம் (Brighton Pier Group) தனது 126 ஆண்டு பழமையான, Grade II* பட்டியலிடப்பட்ட அரண்மனையை சந்தையில் விற்பனைக்கு வைத்துள்ளது.

பிரைட்டன் அரண்மனை என்பது இங்கிலாந்தின் பிரைட்டன் நகரில் உள்ள ராயல் பவிலியன் (Royal Pavilion) என்றழைக்கப்படும் முன்னாள் அரச மாளிகையைக் குறிக்கும்.

அதாவது, Grade II* பட்டியலிடப்பட்ட கப்பல்துறை “வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டது” என்று குறிக்கிறது. இதற்கான மாற்றங்கள் செய்ய அரசாங்க அனுமதி தேவைப்படும்.

குழு புதிய உரிமையாளர்களை கோடைக்காலத்திற்குள் கண்டறிய முடியும் என்றும், பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவதே இதன் இலக்கு என்றும் தலைமை நிர்வாகி ஆன் அக்கோர்ட் (Anne Ackord)கூறினார்.

இந்த கட்டிடம் 1899 மே மாதம் திறக்கப்பட்டது. பிரைட்டன் பியர் குழுமம் 2016 இல் அதை £18 மில்லியனுக்கு வாங்கியது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சுற்றுலா குறைவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக வர்த்தகம் கடினமாக இருந்தாக கூறப்படுகிறது.

2024 இல் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு கட்டணத்தை அறிமுகப்படுத்தியதால் வருவாயில் ஓரளவு உயர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது அதிகாரிகள் விலை விபரங்களை பகிரவில்லை, ஆனால் “பல மில்லியன்கள் தேவைப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது பிரைட்டனின் வரலாற்று பகுதியும், தேசிய புதையலும் ஆகும். வாங்குபவர்கள் கோடைக்காலத்தில் வர விரும்புவார்கள்” என தலைமை நிர்வாகி அக்கோர்ட் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!