இலங்கை

மஹிந்த அரசாங்கம் எடுத்த தவறான முடிவு – குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்ஷ

மஹிந்த அரசாங்கத்தில் ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு தவறானதென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த முடிவை தாம் அங்கீகரிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

கடந்த காலங்களில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறானவை என்று தாம் இன்னும் நம்புவதாக நாமல் ராஜபக்ஷ கூறினார்.

முந்தைய அரசாங்கங்கள் எடுத்த இதுபோன்ற தவறான முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்கோன் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபருடன் அரசாங்கத்திற்குத் தனிப்பட்ட பிரச்சினை இருப்பது போல் தமக்குத் தெரிவதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்