இலங்கை செய்தி

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ.. தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிப்பதற்கான யோசனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், தோல்வியடைந்தால் பிரதமர் பதவியைப் பெறுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்ற பொஹொட்டுவவின் பலமிக்க அமைச்சர்கள் “அவரை விமர்சித்துள்ள” நிலையில், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!