செய்தி

இலங்கை ஜனாதிபதியாகும் முயற்சியில் நாமல்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

அதற்கு ஏற்ற வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்சவின் விருப்பத்தின் பேரில் இந்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா முன்னிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான பின்னணியில் தம்மிக்க பெரேரா தேர்தலில் போட்டியிட முன்வந்தால் எதிர்க்கட்சிகள் வலுவடையும் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!