இலங்கை

திருகோணமலையில் மரவள்ளி தோட்டத்தில் சிக்கிய மர்மம் – கைது செய்யப்பட்ட இளைஞன்

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (02) இடம்பெற்றுள்ளது.

சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளித் தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை மறைத்து வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த தோட்டத்தை சோதனையிட்டபோது எட்டு கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி -சிறுபிட்டிகுளம் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் நிரோஷன் (26 வயது) எனவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை எட்டு கஞ்சா செடிகளுடன் திருகோணமலை நீதிமன்றில் ஆச்சரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 15 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content