ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருளின் மர்மம் விலகியது

மேற்கு ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பொருள் செயற்கைக்கோள் போக்குவரத்து ரொக்கெட்டின் பாகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

பெர்த்தில் இருந்து வடக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் கடந்த 16ம் திகதி இந்த துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஐரோப்பிய-ஆஸ்திரேலிய மற்றும் இந்திய விண்வெளி அதிகாரிகளின் விசாரணையில், இது விபத்துக்குள்ளான ரெக்கெட்டின் ஒரு பகுதி என்று இறுதியாக முடிவு செய்துள்ளது.

இதனிடையே, சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில், இந்த விண்வெளிப் பொருளை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், இது இந்திய அரசால் அனுப்பப்பட்ட ரொக்கெட்டின் ஒரு பகுதி என்பதால், அதற்கு முன்னதாக அவர்களின் கருத்தைக் கேட்க நடவடிக்கை எடுப்பதாக மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!