இந்தியா

கர்நாடகாவில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை கொன்றுவிட்டு மாயமான நபர்!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரை கொன்றுவிட்டு மாயமான நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் திருப்தி நகர் பகுதியில் வீடு ஒன்றில் ஹசீனா என்பவர் தனது மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது 4 பேரும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் பொலிஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் 4 பேரும் கொலை செய்யப்பட்டு இருப்பதும் ஆனால் வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் மாயமாகவில்லை என்பதும் தெரியவந்தது.

எனவே இந்த கொலை எதற்காக நடைபெற்றது என்பதை கண்டறிய பொலிஸா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகில் இருந்த CCTV காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் ஹசீனாவின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

வீட்டிற்கு வந்த அந்த நபர் ஹசீனாவுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!