ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா வானில் தோன்றிய மர்ம ஒளி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா வானில் நேற்று இரவு மர்ம ஒளி அவதானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவதானிக்கப்பட்டது இது விண்கல் அல்ல எனவும் அது ரஷ்ய ரொக்கெட் எனவும் தெரியவந்துள்ளது.

மெல்போர்னில் இருந்து மவுண்ட் புல்லர் வரை வசிப்பவர்கள் இந்த பிரகாசமான ஒளியைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனை 30 முதல் 40 வினாடிகள் வரை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணில் இருந்து பூமிக்கு வரும் ரஷ்யாவின் சோயுஸ்-2 ரொக்கெட்டாக இருக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இந்த விண்வெளி பரிசோதனை குறித்து ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!