ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகாலையிலேயே பரபரப்பை ஏற்படுத்திய மர்ம மரணங்கள்

ஆஸ்திரேலியாவின் Waverleyயில் உள்ள பிளெட்சர் வீதியில் 20 வயதுடைய நபர் ஒருவர் வீதியில் அதிக இரத்தப்போக்குடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

ஆஸ்திரேலிய நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த நபர் வீதியில் கிடப்பதாகவும், அவரது உடலில் இருந்து இரத்தம் கசிந்திருப்பதாகவும் அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதாகவும்பொதுமக்களின் அழைப்பைத் தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

NSW ஆம்புலன்ஸ் துணை மருத்துவர்களால் அந்த நபரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இதுவரையில் குறித்த நபர் அடையாளம் காணப்படவில்லை.

க்ளென் மற்றும் சில்வர் வீதிகளுக்கு இடையே உள்ள பிளெட்சர் வீதியை தவிர்க்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ப்ளெட்சர் வீதியில் சம்பவம் நடந்த இடத்தில் ஒரு பொலிஸ் மீட்பு கூடாரம் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிகாலை 4.40 மணியளவில் வோல்ஸ்டோன்கிராஃப்ட் ரயில் தண்டவாளத்தில் நபர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அந்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!