ஆசியா

சிங்கப்பூரில் இந்தியப் பெண் கொலை – வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

சிங்கப்பூரில் இந்தியப் பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு பணிப்பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தான் பணியாற்றும் இடத்தின் உரிமையாளரின் 70 வயது மாமியாரான இந்திய பெண்ணை சுமார் 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்தபணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மியான்மரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் என்றும், மேலும் அவர் சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த 70 வயதான அந்த இந்தியப் பெண்ணை, Zin Mar Nwe என்ற அந்த பணிப்பெண் சுமார் 26 முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

“ஏஜெண்டிடம் உன்னை திருப்பி அனுப்பி விடுவேன்” என்று கூறி பணிப்பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். இதனால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி 5, அன்று அவர் சிங்கப்பூருக்கு வந்ததாகவும், மேலும் அவரது கடவுசீட்என் அடிப்படையில் அப்போது அவரது வயது 23ஆக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!