இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், மணிக்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசிக்கப்பட்டுள்ளனர்.





