இலங்கை

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி் பதவி?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக தெரிவைக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 25 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் அரசியல் [பிரவேசம் தொடர்பில் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேரா மேலும் தெரிவிக்கையில் ” மறைந்த கணவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தும், அவரது அரசியல் விவகாரங்களை நிர்வகித்து வந்தாலும், அப்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறினார். “எனக்கு இன்னும் அத்தகைய எண்ணம் இல்லை.”

“எவ்வாறாயினும், புத்தளம் மாவட்ட மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் எனது கணவரின் வெற்றிடத்தை நிரப்பி அவருக்குப் பதிலாக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால், நான் அதை பரிசீலிக்கலாம். எனது நான்கு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இப்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” என அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content