இலங்கை

கண்டியில் 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்

கண்டியில் முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறி தனது 5 வயது மகளுக்கு சூடு வைத்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, நாகஸ்தான பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 30 வயதுடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயார் சிறுமியின் உடலில் கரண்டியால் சூடு வைத்துள்ளார்.

காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் உடலில் 04 இடங்களில் தீக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்