தமிழ்நாடு

மகளின் கண்முன்னே தாய் வெட்டிக் கொலை… கைதான கணவரின் சகோதரரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியான எப்போதும் வென்றான், கீழத்தெரு பகுதியை சேர்ந்த சின்னமணி என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வைரமுத்து என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் உயிரிழந்த பின்னர், தனது பிள்ளைகளுடன் தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் இவர் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது வசித்திருக்கும் பகுதிக்கு ரேஷன் அட்டையை மாற்றாததால், தனது சொந்த ஊருக்கு மகளுடன் பேருந்தில் வந்து இன்று ரேஷன் பொருட்களை வாங்கியுள்ளார். மீண்டும் தான் வசிக்கும் புதுப்பேட்டை பகுதிக்குச் செல்ல மகளுடன் பேருந்து நிலையத்தில் சின்னமணி காத்திருந்ததாக தெரிகிறது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை | Pudukottai News - Former  panchayat council president hacked to death

அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பியான ராஜேஷ் கண்ணன், சின்னமணியிடம் தகராறு செய்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஷ் கண்ணன் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் சின்னமணியை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தன் கண் முன்னே தாய் கொலை செய்யப்பட்டதைக்கண்ட அவரது மகள் அதிர்ச்சியடைந்தார்.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சின்னமணியின் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சின்னமணியை கொன்ற அவரது கணவரின் தம்பியான ராஜேஷ் கண்ணனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்தவுடன் அவரது தம்பியான ராஜேஸ் கண்ணனுடன் தொடர்பில் இருந்த சின்னமணிக்கு, வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜேஸ் கண்ணன் கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாததால், ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொன்றதும் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content