பாலஸ்தீனக் குழந்தைக்குச் சிங்கப்பூர் எனப் பெயர் சூட்டி கௌரவித்த தாய் – தந்தை

காஸாவில் பிறந்த பாலஸ்தீனக் குழந்தைக்கு, தனது தாய் மற்றும் தந்தை சிங்கப்பூர் (Singapore) எனப் பெயர் சூட்டி சிங்கப்பூர் நாட்டை கௌரவித்துள்ளனர்.
இச்செய்தியைச் சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டூழியரான கில்பர்ட் கோ (Gilbert Goh) தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கில்பர்ட் கோ நடத்தும் Love Aid Singapore அறநிறுவனம் காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி திரட்டி, அங்கு சமையல் கூடங்களை (Community Kitchens) நிறுவியுள்ளது.
இந்தச் சமையல் கூடங்களில் உதவியாளராக புரியும் காஸாவைச் சேர்ந்த நபர், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமது குழந்தைக்குச் சிங்கப்பூர் என பெயரிட்டுள்ளார்.
அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது, இந்தச் சிங்கப்பூர் சமையல் கூடத்தில் தொடர்ந்து உணவு உட்கொண்டதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
குழந்தை நலமாக வளரத் தாம் வாழ்த்துவதாகவும், இதுவரை காஸா மக்களுக்கு உதவி அளித்த அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கில்பர்ட் கோ குறிப்பிட்டுள்ளார்.
Love Aid Singapore அமைப்பு எல்லை, இனம், சமயம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.