இலங்கை

இலங்கையில் கோர விபத்தில் சிக்கி தாயும் மகளும் பலி: உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தையும் மகனும்

மாத்தளை, பலாபத்வல, கிருலுகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இன்று வத்தேகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தம்புள்ளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயது மகள் சச்சினி தாரகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற மகனும் பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 34 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்