இலங்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தால் 640க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் உள்ள கங்கோடவில நீதிமன்றத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இன்று அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களிடம் இருந்து ரூ. 860 மில்லியன் முதல் 900 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதி மற்றும் நியாயத்தை உறுதி செய்ய எந்த நேரத்திலும் நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!