பிரேசிலில் படகு ஒன்றுக்குள் 20க்கும் அதிகமான சடலங்கள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்
பிரேசிலின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு ஒன்றில் ஏராளமான சிதைந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு கிட்டத்தட்ட 20 சடலங்கள் இருப்பதாக ஊகிக்கப்படுவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
சடலங்கள் அழுகியதால் படகில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை என பிரேசில் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலனாய்வாளர்கள் குழு பிரேசிலியர்களாக இருக்க முடியாது என்று ஊகித்தனர், ஆனால் அவர்கள் பெரும்பாலும் கரீபியன் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கூறினார்.
(Visited 22 times, 1 visits today)





