இலங்கை

ஐரோப்பாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் பிரித்தானியா மற்றும் போலந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இவர் மீது கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு 07 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுதித் கசுன் மாரகே என்ற 55 வயதுடைய  நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நபருக்கு எதிராக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கும் 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்