தி.மு.கவை கொதிப்படைய வைத்துள்ள மோடியின் எக்ஸ் பதிவு!
தமிழகத்தை ஆளும் தி.மு.கவுக்கு விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி Modi தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நிற்கின்றது எனவும் அவர் கூறினார்.
பா.ஜ.க. உள்ளடங்கலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்த நிலையிலேயே மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பான பதிவை அவர், தமிழ் மொழியிலேயே பதிவிட்டுள்ளார்.
“ தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது.
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த பதிவு தொடர்பில் திமுக ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான பதிவுகளையும், விமர்சனங்களையும் அவர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
அதேவேளை, தேர்தல் காலத்தில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத துரோக ஆட்சியே பா.ஜி.க. ஆட்சி எனவும் விமர்சித்துள்ளார்.





