உலகம்

உலகளவில் மில்லியன் கணக்கானோர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படும் அபாயம்

உலகளவில் சுமார் 14 மில்லியன் பேர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கைக்கமைய, நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணவு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கொவிட் 19 பெருந்தொற்றுக்கு முன் 135 மில்லியன் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, இது 319 மில்லியனாக அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்தது.

ஐக்கிய நாடுகளின் கீழ் செயல்படும் உலக உணவுத் திட்ட அமைப்பு உலகின் மிகப்பெரிய நிவாரண உணவுத் திட்டமாகும்.

ஆனால், இந்த ஆண்டில் அமைப்பிற்கு வழங்கப்படும் நிதி 40 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உணவு வழங்கல் நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும் எனவும் அமைப்பு எச்சரித்துள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!