ஐரோப்பா

ஸ்பெயினில் ஆடு மேய்க்கும் தொழில்துறைக்கு வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு

ஸ்பெயினில் மிகவும் தொன்மையான ஆடு மேய்க்கும் தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழில் வெற்றிடத்தை நிரப்ப ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஸ்பெயினின் சிறிய கிராமங்களில் 400 ஆடுகள் கொண்ட மந்தையைப் பராமரிக்கும் பணியில், சூடானைச் சேர்ந்த ஒசாம் அப்துல்முமென் போன்ற இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றதால், கிராமப்புறங்களில் ஆடு மேய்ப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், குடியேறிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி அளித்து பண்ணைகளுடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

குடியேறிகளின் உதவி இல்லையென்றால், தமது கால்நடைப் பண்ணைகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மூடப்படும் என பண்ணை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குடியேறி இளைஞர்களின் வருகையால் ஸ்பெயினின் பாரம்பரிய செம்மறி ஆட்டுப் பால் சீஸ் உற்பத்தி பாதுகாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்