வட அமெரிக்கா

மெக்சிகோ: கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அகதிகள் படகு – 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்பவர்கள் குடியேற்ற அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிக்க ஆறு மற்றும் கடல் வழி பயணத்தையும் மேற்கொள்கின்றனர்.

ஆனால் ஆபத்தான இந்த பயணங்களின்போது சில சமயங்களில் விபத்துக்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் மெக்சிகோ வழியாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் அகதிகள் சிலர் படகு மூலம் சென்றனர். அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலையால் அந்த படகு கடலில் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கடலோர பொலிஸார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்