ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் தட்டம்மை சம்பவங்கள் ;ஆபத்தான நிலையில் மில்லியன் கணக்கான குழந்தைகள்

ஐரோப்பிய நாடுகளில் தட்டம்மை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்று என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தட்டம்மை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது குறிப்பிட்டது.

ஐரோப்பாவில் 2023ஆம் ஆண்டு 61,070 சம்பவங்கள் பதிவாகின. அதுவே ஆக அதிகமான சம்பவங்கள் ஆகும். ஆனால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே 56,634 தட்டம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் நான்கு பேர் இறந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு 941 தட்டம்மை சம்பவங்கள் மட்டுமே ஐரோப்பாவில் பதிவாகியிருந்தது.

தட்டம்மைக்கு எதிரான தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் விரைவாகப் பயன்படுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது.

எளிதில் பாதிப்படையக்கூடிய மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர் உடனடியாக தடுப்பூசிகளை போட்டுக்கொளுமாறு அது அறிவுறுத்தியது.

தட்டம்மை ஏற்படுத்தக்கூடிய கிருமி இருமல், தும்மல் ஆகியவற்றால் எளிதில் பரவும். குறிப்பாக குழந்தைகள் எளிதாகப் பாதிக்கப்படுவார்கள்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content