செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பாரிய காட்டுத்தீ – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான காட்டுத் தீயினால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் புகையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காட்டுத் தீயினால் ஏற்படும் புகை மிகவும் ஆபத்தானது என்பதால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா முழுவதும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 20,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ நிலைமை வார இறுதி வரை நீடிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!