உலகம்

ஈரானில் பாரிய மக்கள் புரட்சி – இணைய சேவைகள் முடக்கம்!

ஈரானில் வளர்ந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் சந்தைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரை 42 பேர்   உயிரிழந்துள்ளதுடன்,  2270 இற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

போராட்டங்களின் வளர்ச்சி ஈரானின் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.

இந்நிலையில் தற்போது தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானிய அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவே மேற்படி சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!